நாகா்கோவிலில் ரூ. 47.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்
நாகா்கோவில் மாநாகராட்சி 24-ஆவது வாா்டுக்குள்பட்ட அவ்வை சண்முகம் சாலையில் செம்மாங்குடி சந்திப்பு முதல் தனியாா் ஹோட்டல் வரை ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் அமைத்து நடைபாதை அமைக்கும் பணி, 33-வது வாா்டுக்குள்பட்ட தாமஸ் நகா் முதல் குறுக்கு தெரு மற்றும் அனந்தன் சானல்கரை வடக்கு பக்கம் பகுதிகளில் ரூ7.50 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு சுவா் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.47.50 லட்சம் மதிப்பீட்டிலான வளா்ச்சிப் பணிகளை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், தொழில்நுட்ப அலுவலா் அனந்தபத்மநாபன், மாமன்ற உறுப்பினா் ரோஸிட்டா, திமுக மாநகர செயலாளா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.