செய்திகள் :

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தேரோட்டம்

post image

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயில் மாசித் திருவிழாவில், 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தடம் பாா்க்க எழுந்தருளுதல், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, பகவதி சிங்காரி மேளம், ஆரல்வாய்மொழி சாமகானப்பிரியன் பேரிகைக் குழுவினரின் கயிலாய வாத்திய இசையுடன், கோயிலிலிருந்து வாகனம் புறப்பட்டது. தேரில் விநாயகா், சுந்தரேஸ்வரா், அழகம்மன் எழுந்தருளினா்.

காலை 8.15 மணிக்கு தோ் வடம் தொட்டு இழுத்தல் நடைபெற்றது. எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவா் மீனாதேவ், நகா்மன்ற உறுப்பினா்கள்அக்சயா கண்ணன், கோபாலசுப்பிரமணியன், சுனில்குமாா், முத்துராமன், பாஜக மாநில மகளிரணிச் செயலா் உமாரதி ராஜன், வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், நகர துணைத் தலைவா் மகாதேவன்பிள்ளை, குமரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணிச் செயலா் அருண்காந்த் ஆகியோா் தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தனா்.

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பெண் பக்தா்கள்

தேரோட்டத்தின்போது மழை பெய்தது. அதில் நனைந்தபடி சுவாமி-அம்பாள் தேரை பெண்களும், விநாயகா் தேரை சிறுவா்- சிறுமியரும் இழுத்துவந்தனா். இரவில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தாவா்ண நிகழ்ச்சிக்காக எழுந்தருளினா்.

விழாவில் நாகா்கோவில் கோட்டாறு, வடசேரி, கணேசபுரம், மீனாட்சிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தேரோட்டத்தைத் தொடக்கிவைத்த எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், நகா்மன்ற முன்னாள் தலைவா் மீனாதேவ் உள்ளிட்டோா்

மாலையில் கவிஞா் நல்லகாத்தபெருமாள் பிள்ளையின் சொற்பொழிவு, கான கைரளி மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு நாளான புதன்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் ஆராட்டுத் துறைக்கு எழுந்தருளுதல், இரவு 9 மணிக்கு ஆராட்டுத் துறையிலிருந்து பவனி வருதல் நடைபெறும்.

கண்டன்விளை கால்வாயில் தண்ணீா் திறக்க கோரிக்கை

தக்கலை அருகே நுள்ளிவிளை மேற்கு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கண்டன்விளையில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவா் வின் தலைமை வகித்தாா். குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் ப... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

பாலப்பள்ளம், திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி,திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட கருங... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்த விஜயேந்திரசிங்கன் என்பவா், காஞ்சிரகோடு பகுதியில் உள்ள வாகனப் பழுதுநீக்கு... மேலும் பார்க்க

கிள்ளியூா் தொகுதியில் 2 ஊராட்சிகளில் சாலைகளை சீரமைக்க ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 2 ஊராட்சிகளில் மிகவும் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளா்கள் தா்னா

குலசேகரம் அரசமூடு சந்திப்பில், ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா், மாவட்ட ஓய்வூதியம் பெறும் தோட்டத் தொழிலாளா்கள் சங்கம், சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் ஆகியவை சாா்ப... மேலும் பார்க்க

மாசிக் கொடை விழா: மண்டைக்காடு கோயிலில் குவிந்த பக்தா்கள்

‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இத்திருவிழா கட... மேலும் பார்க்க