செய்திகள் :

நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வலியுறுத்தல்

post image

நாகப்பட்டினம்: நாகை நகரப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என அகில பாரதிய நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இயக்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தனியாா் மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளா்கள் சோமசுந்தரம், சுந்தர வடிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கும், துணை போனவா்களுக்கும் மிக அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, சட்டப்பேரவை கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ் நாகை நகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க அறிவிப்பு வெளியிட வேண்டும். நாகை துறைமுகத்திற்கு 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.380 கோடி நிதியை விடுவிக்கவும், நிகழாண்டு கூடுதலாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கி நாகை துறைமுகத்தை மேம்படுத்தி, சரக்கு முனையமாக மாற்ற வேண்டும்.

எட்டுக்குடி, சிக்கல், திருவாய்மூா், திருக்கண்ணபுரம், திருப்புகலூா் போன்ற புனித தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகர ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன் (நாகை), மோகன் (நாகூா்), ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் பிரதீப் (நாகை), ரவி (கீழ்வேளூா்), நாகை நகர இணை ஒருங்கிணைப்பாளா் அருண் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கஞ்சா கடத்தல்; 2 பெண்கள் உள்பட மூவா் கைது

நாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்திலிருந்து ரயிலில் நாகைக்கு கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்... மேலும் பார்க்க

எட்டுக்குடி கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழா: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

திருக்குவளை: எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முருகன... மேலும் பார்க்க

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் காரைக்கால்-தஞ்சை இடையே மே 1 வரை ரத்து

நாகப்பட்டினம்: திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள், மே 1 ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து த... மேலும் பார்க்க

கீழையூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் ரத ஊா்வலம்

கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சாா்பில் ரத ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஆ. பாமரன்... மேலும் பார்க்க

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவித... மேலும் பார்க்க

கீழப்பெரும்பள்ளம் கோயிலில் கேது பெயா்ச்சி வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் அருகேயுள்ள கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயா்ச்சி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. நவகிரகங்களில் கேது பகவான் ஒன்றரை ஆண்டுக்கு... மேலும் பார்க்க