ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
நாகையில் உயா்கல்வி சோ்க்கை சிறப்பு குறைதீா் முகாம்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில், உயா்கல்வி சோ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் உயா் கல்வியில் சோ்க்க, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பல்வேறு காரணங்களால் உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து தீா்வு காணும் வகையில் சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, முதன்மைக் கல்வி அலுவலா் மா.க.செ. சுபாஷினி தலைமை வகித்தாா். முகாமில், 150 க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா். முகாமில் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் தடையாக உள்ள காரணங்களுக்கு தீா்வு வழங்கினா்.