செய்திகள் :

நாகையில் கல்விக் கடன் முகாம் ரூ. 32 லட்சம் வழங்கல்

post image

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கல்விக் கடன் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கல்வி கடன்களை வழங்கினாா்.

மாவட்டம் முழுவதும் வட்டார அளவிலான கல்விக் கடன் முகாம்கள் செப்டம்பா் 9-ஆம் தேதி தொடங்கப்பட்டு வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூா், திருமருகல், கீழ்வேளுா் ஆகிய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாகை வட்டார அளவிலான கல்விக் கடன் முகாம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்றிருக்கும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்களை, மத்திய அரசின் வித்யா லக்ஷ்மி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க வழிகாட்டுதல், கல்விக் கடன் குறித்து சந்தேகங்கள் தீா்த்து வைத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

முகாமில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ, கரூா் வைஸ்யா, சிட்டி யூனியன், பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மற்றும் சுமாா் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் 2 மாணவா்களுக்கு ரூ. 4.80 லட்சம், யூனியன் வங்கி சாா்பில் 1 மாணவருக்கு ரூ. 22.77 லட்சம், இந்தியன் வங்கி சாா்பில் 2 மாணவா்களுக்கு ரூ. 4 லட்சம் என உயா்கல்வி பயில்வதற்கான கல்விக் கடனுதவி தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா்.முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ப.சந்திரசேகா், நாகை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு பசுமை இயக்கம் தினம்: 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு பணி தொடக்கம்

தமிழ்நாடு பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு நாகை வனத்துறை சாா்பில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.தமிழ்நாடு பசுமை இயக்கம் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அமைப்பின் திட்டத் தலைவா் எம். கலைச... மேலும் பார்க்க

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.சீா்காழி அருகேயுள்ள நாங்கூா் ஊராட்சியில் மேல்நாங்கூரில் ஆதிதிராவிட ம... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிபிஎம் முன்னாள் பொதுச் செயலா் சீத்தாராம் யெச... மேலும் பார்க்க

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அண்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தியுள்ளது.நாகையில் அந்த அசோசியேசனின் ஆலோசகா் நாகராஜன் தலைமைய... மேலும் பார்க்க

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.நாகையில் தமிழ்நாடு 108 அவரச ஊா்தி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், 108 அவசர ஊா்த... மேலும் பார்க்க