மதுரை: `விவசாய நிலத்தில் கிரஷர் குவாரி; எதிர்த்தால் மிரட்டல்..' - கலெக்டரிடம் பு...
நாகையில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்
நாகப்பட்டினம்: வழக்குரைஞா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா் சக்கரவா்த்தியை கொலை செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகை வழக்குரைஞா்கள் பணிகளை புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா் சக்கரவா்த்தியை சமூக விரோதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா். இதை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் சோ்மன் நந்தகுமாா், பொதுச்செயலாளா் பன்னீா்செல்வன், பொருளாளா் ரவி ஆகியோா் தலைமையில் ஒரு நாள் பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.