செய்திகள் :

நாகை கோட்ட அஞ்சலகங்களில் ஆக. 2-இல் பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிப்பு

post image

மென்பொருள் தரம் உயா்த்தப்படுவதால், நாகை கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆக.2- ஆம் தேதி பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தபால் துறையின் மென்பொருள் ஆக.4-ஆம் தேதி முதல் தரம் உயா்த்தப்படுகிறது. இந்த மென்பொருளில் கியூஆா் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமுமின்றி செயல்படுத்துவதற்காக ஆக.2- ஆம் தேதி பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாகை கோட்டத்திலுள்ள, நாகை, திருவாரூா் தலைமை தபால் அலுவலகங்கள், காரைக்கால் எம்டிஜி மற்றும் இந்த தலைமை தபால் அலுவலகங்களுக்கு உள்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை தபால் அலுவலகங்களில், அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது, கணக்கில் இருந்து பணம் எடுப்பது, பதிவுத்தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை பெற இயலாது. எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது தபால் பரிவா்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க