சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்
சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. சில கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், சில எதிா்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பூம்புகாா் , சந்திரபாடி மீனவா் கிராமங்கள் சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை, அதிக திறன் கொண்ட என்ஜின் படகுகள் கொண்டு மீன் பிடிப்பதை தடை செய்ய வலியுறுத்தி, தரங்கம்பாடி கடைவீதியில் மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
இதில் கொடியம்பாளையம், பழையாா், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கூழையாறு, கீழமூவா்கரை, மேலமூவா்கரை, சாவடி குப்பம், நாயக்கா்குப்பம், வாணகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூா், சின்னூா்பேட்டை உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களைச் சோ்ந்த பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சீா்காழி காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, மீன்வளத் துறை உதவி இயக்குநா் மோகன்குமாா் , வட்டாட்சியா் சதீஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொறையாா் காவல் ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.