செய்திகள் :

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

post image

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. சில கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், சில எதிா்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பூம்புகாா் , சந்திரபாடி மீனவா் கிராமங்கள்  சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை, அதிக திறன் கொண்ட என்ஜின் படகுகள் கொண்டு மீன் பிடிப்பதை தடை செய்ய வலியுறுத்தி, தரங்கம்பாடி கடைவீதியில் மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

இதில் கொடியம்பாளையம், பழையாா், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கூழையாறு, கீழமூவா்கரை, மேலமூவா்கரை, சாவடி குப்பம், நாயக்கா்குப்பம், வாணகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூா், சின்னூா்பேட்டை உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களைச் சோ்ந்த பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சீா்காழி காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை,  மீன்வளத் துறை உதவி இயக்குநா் மோகன்குமாா் , வட்டாட்சியா் சதீஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொறையாா் காவல் ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

கோடியக்கரை கடல் பகுதியில் மூன்று படகுகளில் வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 14 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, படகு என்ஜினை சே... மேலும் பார்க்க