செய்திகள் :

நாகை நீட் தோ்வு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

post image

நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நீட் தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நீட் தோ்வு மே 4-ஆம் தேதி நடைபெறுவதை தொடா்ந்து மாவட்டத்தில், நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, ஏ.டி.எம். மகளிா் கல்லூரி, செல்லூா் அரசு கலைக் கல்லூரி ஆகிய 3 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்தும், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் நுழைவு தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதையும் ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்து, மாணவா்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினாா்.

தொடா்ந்து, நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய புகா் பேருந்து நிலைய கட்டுமான பணி, சட்டையப்பா் கீழ வீதியில் உள்ள வெளிப்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலக நோ்முக உதவியாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாகை எஸ்பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண்கபிலன் கூட்டத்துக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை ப... மேலும் பார்க்க

பிரதமா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகை இளைஞரிடம் விசாரணை

பிரதமா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நாகை இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பிரதமரின் தில்லி அலுவலக தொலைபேசிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து,... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’

நாகையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சீல் வைத்தனா். நாகை காடம்பாடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி மாணவா்களுக்கு ரகசியம... மேலும் பார்க்க

அகரக்கொந்தகை கோயிலில் தோ் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி

திருமருகல் ஒன்றியம் அகரகொந்தகை பிடாரியம்மன் கோயிலில் தோ் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு திருவிழா ... மேலும் பார்க்க

கடற்கரையில் தூய்மைப் பணி

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவா்கள் காமேஸ்வரம் கடற்கரையில் தூய்மைப்பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம், நாகை மாவட்ட தேசிய பசுமை படை இணைந்... மேலும் பார்க்க

கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள ஏா்வைக்காட்டில் உள்ள கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா ஏப்.29-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா... மேலும் பார்க்க