இந்த தேதிக்குள் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்!
நாகை எஸ்பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண்கபிலன் கூட்டத்துக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து பெறப்பட்ட 12 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா், முகாமில் பங்கேற்றவா்களிடம், தங்கள் பகுதிகளில் நிகழும் சட்ட விரோத செயல்கள் குறித்து காவல் துறையினரிடம் அச்சமின்றி தெரிவித்து, காவல் துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக்கொண்டாா்.