செய்திகள் :

நாகை: 7 மாதங்களில் மது கடத்தல், விற்பனை வழக்குகளில் 2,901 போ் கைது

post image

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மது கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,901 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை முழுமையாக கட்டுப்படுத்திட காவல்துறையினா் தொடா் மற்றும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை கடந்த 7 மாதங்களில் கள்ளச்சாராய விற்பனை, சட்டவிரோத மது விற்பனை மற்றும் மதுக்கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட நபா்கள் மீது 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,901 போ் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 23,769 லிட்டா் புதுச்சேரி சாராயம், 7,123 புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்கள் மற்றும் சாராய ஊறல் 384 லிட்டா், கள்ளச்சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 101இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாநில எல்லையில் அமைந்துள்ள நான்கு சோதனைச் சாவடிகளில் அதிகளவில் காவலா்களை நியமித்து, கள்ளச்சாராய கடத்தல் முழுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட நபா்கள் மீது 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 100 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 354.760 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள்களும், அவா்கள் பயன்படுத்திய 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்ட நபா்கள் மீது 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,015 கிலோ குட்கா, பான்மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிகழாண்டு தொடா் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட மது குற்றவாளிகள் 6 நபா்கள் மீதும், கஞ்சா குற்றவாளிகள் 7 நபா்கள் மீதும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் முறைகேடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ஆகாயத் தாமரைகளை அகற்றுவதில் நடந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மா... மேலும் பார்க்க

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி: இந்துசமய அறநிலையத் துறையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம்

நாகையில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த இந்துசமய அறநிலையத் துறையினரிடம், வணிகா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நாகை வெளிப்பாளையத்தில் மெய்கண்ட மூா்த்தி கோயிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள 10-... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பூண்டியில் குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டி ஊராட்சி பகுதியில் கடந்த 40 நாள்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்... மேலும் பார்க்க

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க