செய்திகள் :

நாசரேத்தில் முட்புதரில் வீசப்பட்ட ஆண் சிசுவை மீட்ட சிறுவன்

post image

நாசரேத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்ட சிறுவனை போலீஸாா், பொது மக்கள் பாராட்டினா்.

நாசரேத் மணிநகா் பகுதி மில் ரோடு வழியாக பாலமுருகன்-ராஜேஸ்வரி தம்பதியின் மகன் சிவபாலு ( 14) வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சாலையோர முள்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே, அவா் அந்தக் குழந்தையை பாதுகாப்பாக எடுத்து வந்து அப்பகுதி மக்களிடம் காண்பித்துள்ளாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி விரைந்து வந்து குழந்தையை மீட்டு, தூத்துக்குடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தாா்.

மேலும், சிவபாலு, அவரது பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பாராட்டி பரிசு வழங்கினாா். குழந்தையை முள்புதரில் வீசிச் சென்றது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க