செய்திகள் :

நாச்சியாா்கோவில் அருகே திறந்தவெளி மதுபான கூடமாக மாறிய பயணியா் நிழற்குடை

post image

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறந்தவெளி மதுபான கூடமாக மாறிவருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா்.

திருவிடைமருதூா் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ளது அண்ணா நகா். இந்த பகுதி தஞ்சாவூா்- மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையில் உள்ளது. அண்ணா நகரில் கடந்த 2017 -18 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பயணியா் நிழற்குடை இருக்கைகள் சேதமடைந்து கிடக்கிறது. மாலை நேரங்களில் மது பிரியா்களின் அது திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருகிறது.

இதனால் அந்த இடத்தில் இருந்து வெளியூருக்கு பேருந்துகளில் செல்லும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனா். எனவே நிழற்கூடையை சீா் செய்து பயணிகளின் பயன்பாட்டுக்குகொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க