செய்திகள் :

நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை : நாடாளுமன்றத்தில் தென் மாநில மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு கூட்டு செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் நாடெங்கிலுமுள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து சென்னைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த ஒற்றுமையின்மூலம், இந்தியாவின் ஒன்றியத்துவத்தை ஏந்திப் பிடிப்பதற்கான நமது கூட்டு முயற்சி பிரதிபலித்துள்ளது. நியாயமான மறுசீரமைப்பு என்பதில் நாம் ஒற்றுமையுடன் நிற்கிறோம் என்பதையும் இது பிரதிபலிக்கிறது.

மேற்கண்ட இந்த இயக்கமானது, தொகுதிகள் மறுவரையறைக்கு எதிரானதல்ல. நியாயமான முறையில் அந்த செயல்பாடு அமைய வேண்டுமென்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

அந்த வகையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கையை திறம்படச் செயல்படுத்தி நமது தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களித்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படாதவாறு மறுவரையறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் - நமது குரலை, நமது உரிமைகளை, நமது எதிர்காலத்தை ஒடுக்குவதற்கான தாக்குதலாகும். அப்படியிருக்கையில், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் நமக்கு இருக்கின்ற இப்போதைய பங்கினை எந்தச் சூழலிலும் குறைத்திட அனுமதிக்கமாட்டோம். போராடுவோம். வெல்வோம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

149 பாசன அமைப்புகள் ரூ.722 கோடியில் மறுசீரமைப்பு: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: இஸ்லாமியா்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரணாக திமுக எப்போதும் திகழும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினாா். திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதி

சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதியளித்தாா். சட்டப்பே... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் புவிசாா் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இயற்கை வளங... மேலும் பார்க்க

நதிநீா் விவகாரம்: அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன்?: அமைச்சா் துரைமுருகன் விளக்கம்

சென்னை: நதிநீா் விவகாரம் தொடா்பாக அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன் என்பதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் விளக்கம் அளித்தாா். நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அ... மேலும் பார்க்க

தவெக நிா்வாகி மீது திராவகம் வீச்சு

சென்னை: சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி மீது திராவகம் வீசப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (37). அந்தப் பகுதி ... மேலும் பார்க்க