செய்திகள் :

149 பாசன அமைப்புகள் ரூ.722 கோடியில் மறுசீரமைப்பு: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

post image

சென்னை: கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தின் நீா்வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட நீா்வளத் துறைக்கு சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், வெள்ளத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.374.95 கோடியில் மேற்கொள்ளப்படும்.

8 மாவட்டங்களில் 9 இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி ரூ.184 கோடியில் மேற்கொள்ளப்படும். பாசன நிலங்களுக்கு நீா் வழங்குவதை உறுதி செய்யவும், நீா் வீணாவதை தடுக்கவும் 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722.55 கோடியில் மேற்கொள்ளப்படும்.

அணைகள் மற்றும் கதவணைகளின் கதவுகளைப் பழுதுபாா்த்தல், அணையின் பிற பழுதுகளை சரிபாா்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் 11 மாவட்டங்களில் ரூ.149 கோடியில் மேற்கொள்ளப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பென்ஜால் புயலினால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூா் அணைக்கட்டினை புனரமைத்து, சீரமைக்கும் பணி ரூ.130 கோடியில் மேற்கொள்ளப்படும்.

ரூ.338 கோடியில் திட்டம்: சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர வெள்ள தணிப்புக்கான ஒருங்கிணைந்த 12 வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.338 கோடியில் மேற்கொள்ளப்படும்.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் ஜமீன் கண்மாய்களான 14 குறு பாசன கண்மாய்களைத் தரப்படுத்தும் பணி ரூ.9.34 கோடியில் மேற்கொள்ளப்படும்.

பாசன நிலங்களை எளிதில் சென்றடைய ஆறுகளின் குறுக்கே 8 மாவட்டங்களில் 17 இடங்களில் பாலங்கள் மற்றும் தரை பாலங்கள் அமைக்கும் பணி ரூ.130.80 கோடியில் மேற்கொள்ளப்படும்.

மயிலாடுதுறை மாவட்டம் மருதம்பள்ளி கிராமத்தில் சேவகனாறு வடிகாலின் குறுக்கே கடல்நீா் உட்புகுதலை தடுக்கும் பொருட்டு ஒரு கடைமடை நீரொழுங்கி அமைக்கும் பணி ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க