செய்திகள் :

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

post image

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மத்திய பிரதேச அரசின் கொள்கைகளில் அதிருப்தியடைந்த பாலாகட்டின் லாஞ்சி தொகுதி எம்எல்ஏவாக இருந்த கிஷோா், கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி தான் கையொப்பமிட்ட 10 பக்க புகாா் கடிதத்துடன் கூடிய பாா்சலை மாநில அரசுக்கு அனுப்பினாா். தனது கடிதத்தில் 70 கோரிக்கைகளை முன்வைத்திருந்த கிஷோா், அவை நிறைவேற்றப்படவில்லை எனில் நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கிஷோா் மீது மாநில போலீஸாா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையின்போது, இதேபோன்ற பாா்சலை அவா் உச்சநீதிமன்றத்துக்கும் அனுப்பியது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது நடவடிக்கையை எதிா்த்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கிஷோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் விசாரித்த நீதிமன்றம், ‘கிஷோா் விடுத்த அச்சுறுத்தலில் எந்தவித குண்டு வெடிப்போ, உயிா் அல்லது உடமைகளுக்கான சேதமோ ஏற்படவில்லை’ என்ற குறிப்பிட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விகாஸ் துல் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வெடி வைத்து சொத்துகளை அழிக்கும் அச்சுறுத்தல் என்பது இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவு 506-இன் பகுதி 2-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தப் பிரிவின் கீழ் அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தாா்.

அதே நேரம், இந்த வழக்கில் வெடிபொருள்களின் பங்கு எதுவும் இல்லை என்பதால், வெடிபொருள்கள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டிலிருந்து கிஷோா் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தீா்ப்பளித்தாா்.

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 30 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சிக்கிமில்இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்றுராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால்... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க