செய்திகள் :

நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!

post image

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலைக் கருத்தில் கொண்டு இந்த விமான நிலையங்கள் மே 10 ஆம் தேதி வரை பொதுமக்களுக்காக மூடப்பட்டிருந்தது.

போர் சுழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, மே 15 ஆம் தேதி வரை குறைந்தது 24 பயணிகள் விமான நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவித்துள்ள நிலையில் அவற்றின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, புந்தர், கிஷன்கர், பாட்டியாலா, சிம்லா, தர்மசாலா மற்றும் பதிண்டா உள்ளிட்ட விமான நிலையங்கள் அடங்கும்.

அதே வேளையில் ஜெய்சால்மர், ஜோத்பூர், லே, பிகானேர், பதான்கோட், ஜம்மு, ஜாம்நகர் மற்றும் பூஜ் ஆகிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பயணத்திற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மறு திட்டமிடல் கட்டணங்களில் ஒரு முறை சலுகை அல்லது ரத்து செய்தலுக்கான முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் குறைந்து 68,606 கோடி டாலராக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.முந்தைய வாரத்தில் இது 1.983 பில்லியன் டாலர் ... மேலும் பார்க்க

ஏடிஎம் குறித்த வதந்திக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மறுப்பு!

சென்னை: பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகளும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கமளித்ததுடன், அவை மூடப்படுவதாக வரும் வதந்திகள் தவறானவை என்று மறுத்துள்ளது.வழக்கம் ப... மேலும் பார்க்க

யெஸ் வங்கியின் 13% பங்குகளை விற்பனை செய்த எஸ்பிஐ!

புதுதில்லி: தனியார் வங்கியான யெஸ் வங்கியின் 13.19% பங்குகளை ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷனுக்கு 8,889 கோடி ரூபாய்க்கு விற்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.85.41-ஆக முடிவு!

மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ரூபாயின் சரிவை வெகுவாக கட்டுப்படுத்த முடிந்தது. டாலருக்கு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிந்து முடிவு!

மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய காலை நேர வர்த்தகத்தில் கடுமையாக சரிந்து வர்த்தகமானது.இன்... மேலும் பார்க்க

போர்ச் சூழல்: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்... மேலும் பார்க்க