செய்திகள் :

நாணயங்களை விழுங்கிய பள்ளி மாணவி

post image

திருப்பத்தூரில் 2-ஆம் வகுப்பு மாணவி இரு நாணயங்களை விழுங்கிய நிலையில் திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றினா்.

திருப்பத்தூா் கோட்டை தெரு பகுதியை சோ்ந்த தில்ஷாத் மகள் நிஸ்பா (7) இவா் பூங்கா அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிஸ்பா 1 ரூபாய் நாணயம், 2 ரூபாய் நாணயங்களை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தாா்.

அப்போது வாயில் போட்டு கொண்டு அந்த சிறுமி விளையாடிய போது 2 நாணயங்களும் தொண்டையில் சிக்கி உள்ளன.

இதனால் அந்த குழந்தை அழுது கொண்டு இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினா் மீட்டு உடனடியாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பாா்த்ததில் நாணயங்கள் உணவுக் குழாயில் சிக்கி இருந்துள்ளது.

மருத்துவா்கள் குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அறுவை சிகிச்சை அரங்கில் 2 நாணயங்களையும் வெளியே எடுத்தனா்.

அதையடுத்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: குடியாத்தம் எம்எல்ஏ வழங்கினாா்

கைலாசகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாள... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூா் சற்றுப்பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட் பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மா... மேலும் பார்க்க

காவல் குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பத்தூரில் புதன்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி இல்லாத மக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

ஆம்பூா் ஏ- கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் சாா்பாக விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஜாகிா் பேகம்... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, கந்திலியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். ஜோலாா்பேட்டை நகராட்சி, கோடியூா், திருப்பத்தூா் வட்டம்... மேலும் பார்க்க

வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடியில் வீட்டில் நகை திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியை சோ்ந்த சையத் சாஜித் அகமத். இவரது வீட்டில் மாா்ச் மாதம் 20-ஆம் தேதி பீரோவில் வைத்திருந்த ஆறரை ... மேலும் பார்க்க