செய்திகள் :

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

post image

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந்துள்ளது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை சைரன்களை ஒலித்து, வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் தள பக்கத்தில், "நான் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது. தீவிரமான பீரங்கி தாக்குதலாக இருக்கலாம்." எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், "ஜம்மு காஷ்மீரைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வேண்டுகோள், தயவு செய்து தெருக்களில் இருந்து தள்ளியிருங்கள்.

அடுத்த சில மணிநேரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள் அல்லது அருகிலுள்ள நீங்கள் வசதியாக தங்கக்கூடிய இடத்தில் இருங்கள். 

வதந்திகளை நம்பாதீர்கள். ஆதாரமற்ற மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்பாதீர்கள். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்" என்றும் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, நேற்றைய பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட முகாமை இன்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளிலும் பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலும் தீவிர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஜெய்சல்மார் உள்ளிட்ட எல்லையோர நகரங்கள் இருளச்செய்யப்பட்டுள்ளன என என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது.

ஜம்மு, சாம்பா, பதான்கோட் ஆகிய பகுதிகளில் ட்ரோன் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. பூஞ்ச் நகரில் தீவிர பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஆயுதப்படை மூத்த வீரர்கள் குழுவை சந்தித்து உரையாடியிருக்கிறார். பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் பயிலும் தமிழக மாணவர்களை மாநிலத்துக்கு அழைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்பவர்கள், கல்வி சுற்றுலா சென்றவர்கள் என 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீண்டும் அழைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல்சிறுநீரகக் கற்கள் உருவாக ... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்... மேலும் பார்க்க

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளேகிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீர... மேலும் பார்க்க

Operation Sindoor: பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்; முறியடித்த இந்தியா - ராணுவம் சொல்வதென்ன?

அணு ஆயுத பலம் பொருந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு (08/05/2025) மற்றும் இன்று காலையில் (09/05/2025) ட்ரோன்கள் மற்றும் பிற... மேலும் பார்க்க