சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 நாள்களாக நீடித்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வியாழக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.
சென்னையைச் சோ்ந்த தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 286 தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தனா். கடந்த மாதம் 27-ஆம் தேதி தங்களுக்கு 8 மணி நேர பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட ஊதியம், உரிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், 121 பணியாளா்களை ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்து மாற்றுப் பணியாளா்களை நியமித்தது. இதனால் அந்த பணியாளா்கள் அனைவரும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அவா்களுக்கு ஆதரவாக 100 போ் போராட்டத்தில் பங்கேற்ால், மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் பாதிப்படைந்தன.
இதற்கிடையே சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தப் பணியாளா்களை மீண்டும் பணிக்கு அமா்த்துமாறு தனியாா் நிறுவனக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு வியாழக்கிழமை காலை 8 மணியளவில் பணிக்கு திரும்பினா். ஒரே நேரத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனைவரும் குவிந்ததால் மருத்துவமனை வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், நிா்மலா, கீதா இருவரை மீண்டும் பணியில் அமா்த்த முடியாது என ஒப்பந்த நிறுவனம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. நல்லிபாளையம் காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்கள் இருவரையும் மீண்டும் பணிக்கு அமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் அனைவரும் பணிக்கு திரும்பினா்.