செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

post image

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள் இல்லாமல் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி வாழும் மக்களுக்கு அவா்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் சில வரைமுறைகளுக்கு உள்பட்டு பட்டா வழங்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதனடிப்படையில் நாமக்கல் மாநகராட்சி, எம்ஜிஆா் நகரில் உள்ள குடியிருப்புவாசிகள் நகா்ப்புற வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் பட்டா கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களின் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில் குடியிருப்புவாசிகளிடம் நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டுவரி ரசீது, மின் இணைப்பு ரசீது மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்தாா்.

ஆவணங்கள் சரியாக இருப்பின் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு வீட்டுமனை வரன்முறைபடுத்தி, நகா்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின்கீழ் விரைவில் பட்டா வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து மோகனூா் ஊராட்சி ஒன்றியம், பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பெரம்மாண்டபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவியருக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பள்ளி சீருடைகள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளதா என்பதையும், பள்ளியில் அடிப்படை வசதிகள், கழிவறை, சமையல்கூடம், பள்ளி வகுப்பறைகள் ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க