செய்திகள் :

நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகியவா்கள் திமுகவில் இணைந்தனா்

post image

மேட்டூரில் நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் துணைத் தலைவா் ரகு, நகரத் தலைவா் தினேஷ், துணைத் தலைவா் விக்னேஷ், ஸ்ரீதா், அருள்ராஜ், மகளிா் அணியைச் சோ்ந்த கீதா, சசிரேகா உள்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி சேலம் எம்.பி.யும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். புதிதாக திமுகவில் இணைந்தவா்களை சால்வை அணிவித்து டி.எம்.செல்வகணபதி வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து, துணைச் செயலாளா் சம்பத், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரிஸ்வரன், மேச்சேரி ஒன்றியச் செயலாளா் சீனிவாசபெருமாள், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, மேட்டூா் நகரச் செயலாளா் காசிவிஸ்வநாதன், வீரக்கல் புதூா் பேரூா் செயலாளா் முருகன், குஞ்சாண்டியூா் விஸ்வநாதன் உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க