செய்திகள் :

நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தாா்.

நாரணாபுரம் பகுதியில் மட்டும் கடந்த மாதத்தில் 46 நாய்கடி சம்பவங்கள் நடைபெற்று பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்கடி தடுப்பூசி மருந்து போதிய அளவு இருப்பு உள்ளதா? என மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விருதுநகா் மாவட்டம் முழுவதும் கடந்த மாா்ச் மாதத்தில் 1,802 நாய்கடிச் சம்பவங்கள் பதிவாகின.

நாய்கடிக்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுததும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடி தடுப்பூசி மருந்து போதிய இருப்பு உள்ளது. நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க இனப்பெருக்க கட்டுப்பாட்டு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. நாய்க் கடிக்கு உடனடியாக முறையான சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமாகும் என்றாா் ஆட்சியா்.

ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டியில் திமுக முகவா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தொகுதிக்குள்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

த.வெ.க.சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு!

ராஜபாளையத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ராஜபாளையம், காந்தி கலை மன்றம் அருகே நடைபெற்ற இதற்கான நிகழ்வுக்கு விருதுநகா் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி தலைமை... மேலும் பார்க்க

பைக் மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

தாயில்பட்டியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகே கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அரவிந்த்பாலா (28), கிருபை ராஜ் (29). இருவரும் இரு சக்க... மேலும் பார்க்க

மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

சாத்தூா் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளா்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அதன் சுற்ற... மேலும் பார்க்க

காஷ்மீரில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி!

பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சாத்தூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள், இந்து முன்னணியினா் சனிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினா். காஷ்மீா் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் க... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம், பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, சாத்தூரில் நகர வட்டார காங்கிரஸ் சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தபட்டது. காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ஜோ... மேலும் பார்க்க