செய்திகள் :

நாளை(மே 5) 'ஸ்கைப்' சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் 'டீம்ஸ்'!

post image

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் நாளை(மே 5)யுடன் நிறுத்தப்படுகிறது.

விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த காலகட்டத்தில் விடியோ அழைப்புகளுக்கு ஸ்கைப் செயலிதான் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் ஸ்கைப் சேவையை நிறுத்த கடந்த பிப்ரவரி மாதமே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்தது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு செயலியான 'டீம்ஸ்' செயலியை பயனர்கள், ஸ்கைப்புக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக டீம்ஸ் சேவை புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தற்போது ஸ்கைப் செயலியைப் பயன்படுத்திவரும் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் மூலம் எந்தவித உள்நுழைவும் இல்லாமல் டீம்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம். அதாவது ஸ்கைப் ஐடியைப் பயன்படுத்தி உள்நுழையலாம். ஸ்கைப் செயலியில் உள்ள தொடர்புகள், சாட்கள் டீம்ஸ்-க்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஸ்கைப்பைவிட டீம்ஸ் செயலியில் மேலும் சில புதிய வசதிகள் இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போல கூகுள் மீட், ஸூம் ஆகிய செயலிகளின் மூலமாகவும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இருப... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பிராந்திய பாதுகாப்பு குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா். பஹல்காம் பயங்க... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய ... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு; அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடா்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா?’ உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழு... மேலும் பார்க்க