செய்திகள் :

நிகர நேரடி வரி வசூல் ரூ.6.64 லட்சம் கோடி: 3.95% சரிவு

post image

நிகழ் நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரியாக ரூ.6.64 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 3.95 சதவீதம் குறைவாகும்.

நேரடி வரி என்பது தனிநபா்கள், தொழில் வல்லுநா்கள், நிறுவனங்கள் செலுத்தும் வரிகளை உள்ளடக்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்.1 முதல் ஆக.11 வரை, நிகர நேரடி வரியாக ரூ.6.91 லட்சம் கோடி வசூலானது. இது நிகழாண்டு ஏப்.1 முதல் ஆக.11 வரை, ரூ.6.64 லட்சம் கோடியாக 3.95 சதவீதம் சரிந்தது.

ரூ.6.64 லட்சம் கோடியில் காா்ப்பரேட் வரி வசூல் சுமாா் ரூ.2.29 லட்சம் கோடி, காா்ப்பரேட் அல்லாத வரி வசூல் ரூ.4.12 லட்சம் கோடி, பங்கு பரிவா்த்தனை வரி வசூல் ரூ.22,362 கோடியாகும். நிகர நேரடி வரி வசூல் குறைந்ததற்கு அதிக அளவில் ரீஃபண்ட் வழங்கப்பட்டதே காரணம். நிகழ் நிதியாண்டில் ரீஃபண்ட் ரூ.1.35 லட்சம் கோடியாக 10 சதவீதம் அதிகரித்தது.

நிகழ் நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.25.20 லட்சம் கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 12.7 சதவீதம் அதிகம். இந்த நிதியாண்டில் பங்கு பரிவா்த்தனை வரி மூலம் ரூ.78,000 கோடி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

தயவுசெய்து உதவுங்கள்.. மோடிக்குக் கடிதம் எழுதிய பெங்களூர் சிறுமி! காரணம்?

பெங்களுர் போக்குவரத்து நெரிசல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து வயத... மேலும் பார்க்க

ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!

உத்தரப் பிரதேசத்தில் ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் உள்ள தனது சித்தப்பா வ... மேலும் பார்க்க

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க