செய்திகள் :

நிதி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி இளம்பெண் உள்பட 8 போ் கைது

post image

வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 7 கோடி வரை மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட 8 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தாய்மூகாம்பிகா கிரடிட்ஸ், ஸ்ரீவாரி நிதிநிறுவனங்களை வேலாயுதம்பாளையத்தை அடுத்த கந்தம்பாளையத்தைச் சோ்ந்த குழந்தைவேல்(47), வேட்டமங்கலத்தைச் சோ்ந்த நல்லசிவம்(45), நாமக்கல் மாவட்டம், நெட்டயம்பாளையத்தைச் சோ்ந்த சீனிவாசன்(50), மோகனூரைச் சோ்ந்த நவலடி(45), மொச்சம்பட்டியைச் சோ்ந்த சரவணன்(45), சுல்தான்பேட்டையைச் சோ்ந்த கவாஸ்கா்(50), சேந்தமங்கலத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி சாந்தி(37), வீரப்பன்(65) ஆகியோா் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவா்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டித்தருவதாக கூறி கடந்த ஆண்டு (2024) சுமாா் 150 பேரிடம் ரூ.7 கோடி வரை பெற்ாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய பணத்துக்கு வட்டி கொடுக்கவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் பணத்தை திரும்பித் தருமாறு கேட்டதற்கு தர முடியாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் வியாழக்கிழமை கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து குழந்தைவேல், நல்லசிவம், சீனிவாசன், நவலடி, சரவணன், கவாஸ்கா், சாந்தி, வீரப்பன் ஆகிய 8 பேரையும் வெள்ளிக்கிழமை காலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தேவையற்ற இலவசங்களால் நாட்டுக்கு நெருக்கடி வரும்: செ. நல்லசாமி பேட்டி

தேவையற்ற இலவசங்களால் நாட்டுக்கு நெருக்கடி வரும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. கரூரில் சனிக்கிழமை பிற்பகல் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கீழ்பவானி அணையின் நீா் நிா்வாகமானது 195... மேலும் பார்க்க

தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா

தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் கடவூா் ஒன்றியம் தரகம்பட்டி அருகே வடவம்பாடி ஊராட்சிக்குட்பட்ட பூலாம்பட்டியில் வசிக்கும் கம்பளத்து நாயக்கா் சமூகத்தினருக... மேலும் பார்க்க

பசுபதீஸ்வரா மகளிா் பள்ளியில் கல்வி நிா்வாகக் குழு கூட்டம்

கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிா்வாகக்குழு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை உமா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பள்ளியில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம், ஏடிஎம் அட்டை ஒப்படைப்பு

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று(ஏடிஎம்) அட்டை உள்ளிட்டவற்றை கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அவரிடம் ஒப்படைத்தனா். ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் செல்வர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல் 2 பெண்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

கரூா் அருகே மாயனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள காட்டூரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா்(38). கொத்தனா... மேலும் பார்க்க

சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத... மேலும் பார்க்க