செய்திகள் :

நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தனியாா் நிறுவன காவலாளி உயிரிழப்பு

post image

பரமத்தி வேலூா்: நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நாய்க்கடிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் நல்லதம்பி (70). இவா் ஏளுா், புதுப்பட்டியில் உள்ள சோலாா் நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இவா் பணியை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி தனியாா் கோழிப் பண்ணை அருகே சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது நல்லதம்பி சென்ற இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் நல்லதம்பி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நாமக்கல் அருகே உள்ள தத்தாத்திரிபுரம், அய்யா் சாலை பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுா் சிவசங்கரனை (49) தேடிவருகின்றனா்.

ராசிபுரம் அருகே ரூ. 2.20 கோடியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம் அமைக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா். ராசிபுரம், ஆணைக்கட்... மேலும் பார்க்க

ரூ. ஒரு கோடியில் கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வறை?

நாமக்கல்: நாமக்கல்லில் ரூ. ஒரு கோடியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டுவதற்கான நிலத்தை பெறுவதில் இழுபறி நீடிப்பதால், தொழிலாளா்கள் சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது.... மேலும் பார்க்க

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே வீடு புகுந்து பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க 5 இடங்கள் தோ்வு

நாமக்கல்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க ஐந்து இடங்களை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வ... மேலும் பார்க்க

பெண் கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபரை குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி கிராம நிா்வாக அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழியா்களுக்க... மேலும் பார்க்க

போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவா் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இருவரை வேலூா் போலீஸாா் கைது செய்தனா்.பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அருகே இருவா் சட்ட விரோதம... மேலும் பார்க்க