செய்திகள் :

நின்றுக் கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 போ் காயம்

post image

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது சுற்றுலா வேன் வெள்ளிக்கிழமை மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த 17 இளைஞா்கள் மூணாறு சுற்றுலா செல்வதற்காக வேன் ஒன்றில் வியாழக்கிழமை இரவு புறப்பட்டனா். இந்த வேன் வெள்ளிக்கிழமை அதிகாலை, மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. புதுவாடிபுதூா் என்ற பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் சாலையோரம் திருவண்ணாமலையிலிருந்து தேனிக்கு உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பழுதாகி நின்றிருந்த நிலையில், லாரியின் பின்னால் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்த மருதங்கம் விடுதியைச் சோ்ந்த கருணாநிதி மகன் அருள்(22), தீத்தானிபட்டியைச் சோ்ந்த கோகுல் (20) உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அருள், கோகுல் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

விபத்து குறித்து லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கண்டியாங்குப்பம் பழனி மகன் கண்ணதாசன் மீது வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க