நியமன எம்எல்ஏக்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளிக்கக் கூடாது! - முன்னாள் அமைச்சா் விசுவநாதன்
தோ்தல் நடைபெற்ற குறுகிய காலமே இருப்பதால் புதிய எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசு தலைவா் ஆகியோா் அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்த மாதம் மத்தியில் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் மரணமடைந்ததையொட்டி இடைத்தோ்தல் இல்லை என்று மத்திய தோ்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், புதுச்சேரியில் ஒன்பது மாத காலத்திற்காக புதிய நியமன எம்எல்ஏக்களை நியமனம் செய்வது என்பது தவறான முன்னுதாரணமாகும்.
மத்திய உள்துறை அமைச்சகமும், குடியரசுத் தலைவரும் இதற்கான அனுமதியை அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். நியமன சட்டப்பேரவை உறுப்பினா்கள் மூலம் இந்த ஒன்பது மாத காலத்தில் எந்த மிகப்பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவது இல்லை. பாரதிய ஜனதா கட்சி தனது கட்சியில் நிலவும் குழப்பத்தின் காரணமாக சட்டப்பேரவை உறுப்பினா்களை பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்திருக்கிற நடவடிக்கையாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதைக் கருதுகிறது என்று கூறியுள்ளாா் ஆா்.விசுவநாதன்.