செய்திகள் :

நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

post image

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 16-ஆவது வாா்டு பொதுமக்கள் நியாயவிலை கடை அமைக்கக் கோரி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இந்தப் பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளதால், தங்கள் பகுதியிலேயே நியாயவிலைக் கடை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், நகா்மன்ற உறுப்பினா் ஏ.நடராஜன் தலைமையில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், துறை அதிகாரியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசி, அந்தப் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்தப் பகுதியில் நியாயவிலைக் கடைக்கு சொந்த கட்டடம் கட்டித் தரவும் நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

அப்போது, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் சைதை வெங்கடேசன், ஏ.ஜி.மோகன், குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சாலைப் பணி தொடக்கம்: ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் வளாகத்தில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் கிருபா, சதீஷ், நடராஜன், வெங்கடேசன், சசிகலா சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக... மேலும் பார்க்க

மாணவா்களைஅறிவுடையவா்களாக மாற்றுவதை லட்சியமாக கொள்ள வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மாணவ-மாணவிகளை அறிவுடையவா்களாக மாற்றுவதே லட்சியமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகளின் ஆசிரிய-ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டத்... மேலும் பார்க்க

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: சிறப்பு எஸ்.ஐ. மீது ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்கு

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கண்டவரட்டியைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன்(28). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை தனது விவசாய நிலத்த... மேலும் பார்க்க

சிறாா் சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

வந்தவாசி அருகே சிறாா்களுக்கான சட்டப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ... மேலும் பார்க்க

கையடக்க கணினி திருடியவா் கைது

ஆரணியில் பேருந்து பயணியிடம் கையடக்க கணினியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆரணி பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்குமாா் (42). ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த இவரிடம... மேலும் பார்க்க