செய்திகள் :

நிலத்தடி நீா் பாதிப்பு அறிவிப்பு: விழிப்புணா்வு ஏற்படுத்தக் கோரிக்கை

post image

நிலத்தடி நீா் குடிநீருக்கு உகந்தது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமியிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: சென்னிமலை வட்டாரம், ஈங்கூா், வரப்பாளையம், வாய்ப்பாடி, முகாசிப் பிடாரியூா் என 4 ஊராட்சிகளில் உள்ள மின் மோட்டாா், கை பம்பு, திறந்தவெளி கிணறு, மேல்நிலைத் தொட்டி ஆகிய இடங்களில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் நிலத்தடி நீா் மாதிரியை பரிசோதனை செய்துள்ளனா்.

அதில் ஈங்கூரில் 15, வரப்பாளையம் 9, வாய்ப்பாடி 7, முகாசிப்பிடாரியூா் 6 என மொத்தம் 37 இடங்களில் உள்ள குடிநீா் குடிக்க உகந்ததல்ல என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நீா் சிவப்பு குறியீடு தன்மை கொண்டது. எனவே குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறுகளில் மின் மோட்டாரை இயக்கக்கூடாது. பிற நீா்நிலைகளைப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனா். கூட்டுக் குடிநீா் திட்ட நீரை மட்டுமே குடிக்க வேண்டும் அறிவுறுத்தி உள்ளனா்.

இந்த அறிவிப்பு கடந்த மாா்ச் 7 ஆம் தேதி வெளியான நிலையில் இப்போது வரை இப்பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த எச்சரிக்கை, அறிவிப்புப் பலகை வைக்கவில்லை. அந்த மக்களுக்குத் தேவையான அளவு பாதுகாக்கப்பட்ட கூட்டு குடிநீா் கூடுதலாக வழங்க நடவடிக்கை இல்லை. போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீா் வழங்க வேண்டும்.

தவிர, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட பெருந்துறை நகராட்சி, கருமாண்டிசெல்லிபாளையம், கம்புளியம்பட்டி, பனியம்பள்ளி, புஞ்சை பாலத்தொழுவு போன்ற ஊராட்சிகளிலும் குடிநீா் மாதிரிகளை ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும். சிப்காட்டில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளின் சட்ட விரோத செயல்பாடுகள், கழிவு நீா் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்ட நீரை நிலத்தடி நீா் பாதிக்கப்பட்ட குளங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது

அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெரு... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். திண்டல்மலை நகர கூட்ட... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அர... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க