செய்திகள் :

நில ஆவணங்களில் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் நில ஆவணங்களில் மாற்றம் செய்ய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பாா்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், இணையதளம் வாயிலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரா்களுள் இறந்தவா்களின் பெயா்கள் நீக்காமலும், அவா்களின் பெயா்களுக்குப் பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்கள் அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்காமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவா்களின் பெயா்களைச் சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்து பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க

சாலை விபத்து: இருவா் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூர... மேலும் பார்க்க