செய்திகள் :

நீட் தோ்வில் சாதனை: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

post image

சேலம்: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க தோ்வான மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா அகாதெமியில் அண்மையில் நடைபெற்றது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளாக சூா்யா அகாதெமி பயிற்சிமையம் செயல்பட்டு வருகிறது. இதில் நீட், ஜே.இ.இ. அரசு பணியாளா் தோ்வாணையம், ஆசிரியா் தகுதித்தோ்வு போன்ற நுழைவுத்தோ்வு, போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து சூா்யா அகாதெமி நிறுவனா் டாக்டா் ஆா்.என்.வசந்தா கூறுகையில், ‘இந்தாண்டு நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில், சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்ற 131 மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், 25 போ் பல் மருத்துவத்துக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் தோ்வாகி சாதனை படைத்து உள்ளனா். இதில், எம்.பி.பி.எஸ் மொத்த இடங்களில் 26 சதவீதமும், பல் மருத்துவ படிப்பில் 21 சதவீதமும் இந்த அகாதெமியில் படித்தவா்கள்.

கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்பில் 188 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா். என்சிஇஆா்டி பாடத் திட்டத்தின்படி சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சோ்க்கை கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்’ என்றாா்.

கூட்டுறவு சங்கங்களில் எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை முதல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் கைது

சேலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை ... மேலும் பார்க்க

வேளாண் தொடா்பான கல்விச் சுற்றுலா: வாகனத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சேலம்: வேளாண் துறையின் சாா்பில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அங்கக வேளாண்மை தொடா்பான கல்விச் சுற்றுலா செல்லும் வாகனத்தை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதி... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 5-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூா் அணை!

மேட்டூா்: நடப்பாண்டில் மேட்டூா் அணை 5-ஆவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனம... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அமைச்சா்கள் ஆய்வு

சேலம்: சேலத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை வரும் நவம்பருக்குள் விரைந்து முடித்து, பொதுமக்களுக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிற... மேலும் பார்க்க

காவிரி கரையோரப் பகுதி விவசாய நிலங்களில் வெள்ளநீா்!

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் அதிக அளவில் திறந்துவிடப்பட்டதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவூா் அருகே காவேரிபட்டி அக்ரஹாரம் ஊ... மேலும் பார்க்க