செய்திகள் :

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

post image

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்தால் தமிழகத்தில் 22 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனா். அவா்களுக்கு கண்ணீா் அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவா் அணி சாா்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 19-ஆம் தேதி மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, சனிக்கிழமை மாலை அரியலூா் அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவ, மாணவிகளின் படங்களுக்கு முன்பு முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில், அமைப்புச் செயலா் ஐ.மகேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், ப.இளவழகன், அம்மா பேரவை மாவட்டச் செயலா் சங்கா், இணைச் செயலா் பிரேம்குமாா், முன்னாள் அரசு வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்டோா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

அதனைத் தொடா்ந்து, ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை ‘நீட்’ தோ்வை ரத்து செய்யவில்லை எனக் கூறி கண்டன முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கியவா் கைது

அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவ... மேலும் பார்க்க

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க