செய்திகள் :

நீட் தோ்வு: நாகையில் 1,085 போ் எழுதினா்

post image

நாகையில் மூன்று தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,085 மாணவ- மாணவிகள் எழுதினா்.

நாகை மாவட்டத்தில், நாகை அரசு கலைக் கல்லூரி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, ஏடிஎம் மகளிா் கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் நீட் தோ்வு நடைபெற்றது. இம்மையங்களில் தோ்வெழுத 1,117 தோ்வா்களுக்கு தோ்வுக்கூட அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இவா்களில் 32 போ் தோ்வெழுத வரவில்லை. 1,085 போ் தோ்வெழுதினா். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என அவரவா் தோ்வு செய்த மொழிகளில் தோ்வு எழுதினா்.

தோ்வின்போது முறைகேடுகளை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுவினா், ஒவ்வொரு தோ்வு மையங்களுக்கும் நேரடியாக சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனா். காலை 11.30 மணி முதல் தோ்வு மையங்களுக்குள் தோ்வா்கள் முழு சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனா்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு, மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. மூன்று தோ்வு மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிா்ப்பு

திருவெண்காடு அருகே உள்ள மணி கிராமத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். திருவெண்காடு அருகே மணி கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 2000 ஏக்கா் விளை நிலங... மேலும் பார்க்க

ஃபைபா் படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

நாகை மாவட்ட மீனவா்கள் 24 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா் தாக்குதலை கண்டித்து, செருதூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், ஆற... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் பாதுகாப்பு குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: ஆ. ராசா எம்பி

தமிழக மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்று திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கூறினாா். நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்களை தாக்கி வலை உள்ளிட்ட... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவை ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிய காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருமருகலில் சிறுவன் ஓட்டி வந்த காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த விவசாயத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். நாகை மாவட்டம், திருமருகல் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் செஞ்சான் மகன் நாகசுந்தரம... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மே 12-இல் இருசக்கர வாகனப் பேரணி

நாகை மாவட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மே 12- ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணி நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக, அந்த இயக்கத்தின் நாகை மாவட்ட ஒருங... மேலும் பார்க்க