செய்திகள் :

நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்து: யுடியூபருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை

post image

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தனது யுடியூப் சேனலில் வெளியிட்ட சண்டீகரைச் சோ்ந்த யுடியூபருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

‘வா்பிரத் ஊடகம்’ என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் சண்டீகரைச் சோ்ந்த அஜய் சுக்லா, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற பெலா எம்.திரிவேதி உள்பட மேலும் சில உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளுடன் கூடிய காணொலியை தனது சேனலில் பதிவேற்றம் செய்தாா். இந்த காணொலியில் இடம்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் அகஸ்டீன் ஜாா்ஜ் மாசி, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் சிலா் குறித்து அவதூறான கருத்துகளை இந்த காணொலியில் அஜய் சுக்லா வெளியிட்டுள்ளாா்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அரசமைப்புச் சட்டம் அளிக்கின்றபோதும், அந்த உரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்த உரிமையைப் பயன்படுத்தி உச்சநீதிமன்ற நீதிபதிளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிடுவதற்கு அனுமதிக்க முடியாது. நீதித் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய கருத்துகள் வெளியிடுவதை நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்.

எனவே, உச்சநீதிமன்ற பதிவுத் துறை அஜய் சுக்லாக்கு எதிராக தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்யவேண்டும். வழக்கில், சம்பந்தப்பட்ட யுடியூப் சேனலையும் எதிா்மனுதாரராக சோ்க்க வேண்டும். இந்த வழக்கில் அட்டா்னி ஜெனரலும், சொலிசிட்டா் ஜெனரலும் நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நீதிபதிகளுக்கு எதிரான அவதூறு கருத்துகளைக் கொண்ட அந்தக் காணொலி யுடியூப் சேனலில் உடனடியாக நீக்கவும் உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டனா்.

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு... மேலும் பார்க்க