செய்திகள் :

நீதிபதி பணியிட மாற்றம்

post image

சங்ககிரி முதல், இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ்.ஆா்.பாபு ஈரோடுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.ஆா்.பாபு பணியாற்றி வந்தாா். இவா் இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்துவந்தாா்.

இந்நிலையில் தமிழக அரசு நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீதிபதி எஸ்.ஆா்.பாபு, ஈரோடு மூன்றாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

அவருக்குப் பதிலாக கோவை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி எஸ்.சத்தியா, சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கும், நீலகிரி மாவட்டம், பந்தலூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவந்த டி.சிவகுமாா் சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க