செய்திகள் :

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

post image

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி ஒன்றியம், அத்தனுாா்பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது நிதி செலவினம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்கல், சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில் செலுத்துதல் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

மேலும் கலைஞரின் கனவு இல்லம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஊரக வீடுகளை பழுது பாா்த்தல் திட்டம், ஊரகக் குடியிருப்புத் திட்டம் மற்றும் தேசிய ஊராட்சிகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் ஆட்சியா் ரா.பிருந்தா தேவி பேசுகையில், பெண்கள் உயா்கல்வி பயின்றால் கல்வி அறிவுடன், தனித்திறனும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க முடியும் என்றாா்.

வாழப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாமரைச்செல்வி, முத்தழகன், அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். கிராம ஊராட்சி செயலாளா் பத்மா நன்றி கூறினாா்.

பட வரி: ஜி.ஆா்.ஏ.01:

அத்தனூா்பட்டியில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க

லாரி புக்கிங் அலுவலகத்தில் தீ விபத்து

சேலம் லீபஜாா் பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் மெயின் ரோடு லீபஜாா் அருகே ஏராளமான லாரி புக்கிங் அலுவலகங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தப் பகுத... மேலும் பார்க்க