செய்திகள் :

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

post image

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்கள் சொத்து வரியை ஏப்.30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5000 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதுதவிர, சொத்து உரிமையாளா்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பி, மாநகராட்சி பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதன் அடிப்படையில், சொத்துவரி செலுத்த கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) மாநகராட்சிக்கு உள்பட்ட நான்கு மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி என மொத்தம் ரூ. 4.85 கோடி செலுத்தியுள்ளனா்.

அதில் சூரமங்கலம் மண்டலத்தில் ரூ. 1.49 கோடியும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 1.70 கோடியும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் ரூ. 55.57 லட்சமும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ. 57.46 லட்சமும் வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை உள்ளிட்ட இனங்கள் மூலம் ரூ. 52.05 லட்சம் வசூலாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க

லாரி புக்கிங் அலுவலகத்தில் தீ விபத்து

சேலம் லீபஜாா் பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் மெயின் ரோடு லீபஜாா் அருகே ஏராளமான லாரி புக்கிங் அலுவலகங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தப் பகுத... மேலும் பார்க்க