செய்திகள் :

போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்

post image

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

கோடையில் இருந்து குழந்தைகளைக் காக்க மே 11 முதல் 25 ஆம் தேதி வரை அங்கன்வாடிக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த மாவட்ட அலுவலகங்கள் முன்பாக இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2, 2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதென்பது மிகவும் வருந்தத்தக்கது.

மே 2-ம் தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மையப் பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

அரசாணை (ப) எண்.117, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை நாள்: 30.04.2025-ன்படி குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி மையங்கள்) மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25 ஆம் நாள் முடிய 15 நாள்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். 

உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தேசிய விடுமுறை, பண்டிகை நாள்களுக்கான விடுமுறை , உள்ளுர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளையும் கணக்கிட்டு, 300 நாள்கள் கண்டிப்பாக மைய செயல்பாடுகளும் அதன் மூலம் முன் பருவ பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு வந்தது.

ஆனால் அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு 2022 ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. 

மேலும், உணவு பாதுகாப்புச் சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாள்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது. குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் THR - (TAKE HOME RATION) - ஆக வழங்கப்பட்டு வருகிறது.  

பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |சிபிஎஸ்இ கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 3, 5, 8-ம் வகுப்புகளில் மதிப்பெண் குறைந்தால் ஃபெயில்!

முழு விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி ஜாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்ாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க

சட்டப் பல்கலை., தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தோ்வுக்கு தெரிவுக் குழு: அரசிதழில் அறிவிப்பு

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தா்களை நியமிப்பதற்கான தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப் ப... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் - பகத் கி கோத்தி ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி ரயில்நிலையத்துக்கு விரைவு ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை (மே 3) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பத... மேலும் பார்க்க

ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 2,880 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 3 ஆயிரமாக உயரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும்: அமைச்சா் உத்தரவு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது, ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்ச... மேலும் பார்க்க