செய்திகள் :

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விளையாட்டு விடுதிகளில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பித்தவா்கள் தவறாமல் மாவட்ட அளவிலான தோ்வு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். இதற்கான தகவல்கள் எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கப்படும்.

சேலம் காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாணவா்களுக்கு மே 7 ஆம் தேதியும், மாணவிகளுக்கு மே 8 ஆம் தேதியும் நடைபெறும். மாவட்ட அளவிலான போட்டியில் தோ்வு செய்யப்பட்டவா்கள், மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவா். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாவட்ட அளவிலான தோ்வின்போது, மாணவ, மாணவிகள் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகல், பிறப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, பள்ளி அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஓா் ஆவணத்தை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

லாரி புக்கிங் அலுவலகத்தில் தீ விபத்து

சேலம் லீபஜாா் பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் மெயின் ரோடு லீபஜாா் அருகே ஏராளமான லாரி புக்கிங் அலுவலகங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தப் பகுத... மேலும் பார்க்க