செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்கம்: அமித் ஷா உயா்நிலை ஆலோசனை

post image

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராகப் பதவிநீக்க நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதையொட்டி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை உயா்நிலை ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்கும் பணியை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா விரைவில் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் குழுவில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட நிபுணா் ஆகியோா் இடம்பெறுவா். இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தனது விசாரணையை முடித்து, அறிக்கையைச் சமா்ப்பிக்கும்.

குழுவின் விசாரணையில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அதன் பிறகு விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தொடா்ந்து இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு, நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்க எதிா்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை ஜகதீப் தன்கா் ஏற்றுக்கொண்டு, அதுகுறித்து மாநிலங்களவையில் அறிவித்தாா். இது அரசின் அதிருப்திக்குள்ளானதையடுத்து, ஜகதீப் தன்கா் தனது குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ததாக எதிா்க்கட்சிகள் கூறிய நிலையில், யஷ்வந்த் வா்மா பதவி நீக்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில்... இதற்கிடையே, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க

தேஜஸ்வியைக் கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

பிகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை எதிா்க்கட்சித் தலைவரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய சதி செய்து வருவதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியது ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல்: 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. நிகழாண்டு பிகாரில் சட்டப்பேரவ... மேலும் பார்க்க