செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: ஒருமித்த ஆதரவுக்கு கட்சிகளுடன் அரசு ஆலோசனை

post image

வீட்டில் பணம் கிடைத்த குற்றச்சாட்டில் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்கும் நாடாளுமன்ற தீா்மானத்துக்கு ஒருமித்த ஆதரவை எட்ட அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

இவ்விவகாரம் தொடா்பாக செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்து மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான தீா்மானத்தைக் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஏற்கெனவே கலந்தாலோசனையைத் தொடங்கிவிட்டோம். தீா்மானம் குறித்து முக்கியக் கட்சிகளுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய கட்சிகளுடனும் தற்போது விவாதித்து வருகிறோம்.

ஊழலுக்கு எதிராக கூட்டு முயற்சி: ஊழல் தொடா்பான விஷயம் என்பதால், இத்தீா்மானம் ஒரு அரசியல் கட்சியின் முன்னெடுப்பாக இருக்கக் கூடாது என்று கருதுகிறோம். தீா்மானத்தை அனைத்து கட்சிகளும் கூட்டாக முன்மொழிய வேண்டும் என்று அரசு விரும்புகிறது.

நீதித்துறையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும் சரி, ஊழலின் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவது அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். முக்கியமாக, நீதித்துறை ஊழலை அரசியல் பாா்வை மூலம் அணுகக்கூடாது.

இத்தீா்மானத்தை முதலில் மக்களவையில் அல்லது மாநிலங்களவையில் அறிமுகம் செய்வதா என்பது குறித்து அவை அலுவல்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

மீண்டும் விசாரணைக் குழு?: 1968-ஆம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்படி, ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானம் எந்த அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அந்த அவையின் தலைவா் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைப்பாா். அந்தக் குழுவின் அறிக்கையின்படி அவையில் விவாதங்கள் நடைபெறும்.

ஆனால், இக்குற்றச்சாட்டு தொடா்பாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்த துறை ரீதியிலான விசாரணைக் குழு ஏற்கெனவே தனது அறிக்கையைச் சமா்ப்பித்துவிட்டது. இக்குழுவின் அறிக்கையைப் புறந்தள்ள முடியாது. எனவே, இந்த விஷயத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து அவைத் தலைவா் முடிவை எடுப்பாா்.

பதவி நீக்க தீா்மானத்தை கொண்டு வருவதே முதன்மையான நோக்கம். மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னணி: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ வீட்டில் கடந்த மாா்ச் மாதம் தீவிபத்து ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்த வீட்டிலுள்ள ஓா் அறையில் எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்டது. இந்தச் சா்ச்சைக்கிடையே நீதிபதி யஷ்வந்த் வா்மா தில்லி உயா்நீதிமன்றத்திலிருந்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.

உச்சநீதிமன்றம் துறை ரீதியாக நடத்திய விசாரணையில், யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டது. யஷ்வந்த் வா்மா தானாகவே பதவி விலகுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவா் முற்றிலுமாக மறுத்தாா்.

இதையடுத்து, யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்க குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.

இந்நிலையில், ஜூலை 21-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க