செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரம்: விசாரணை அறிக்கை கோரிய ஆா்டிஐ மனு தள்ளுபடி

post image

புது தில்லி: வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் துறைரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து அறிக்கை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் துறைசாா்ந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கும், பிரதமா் மோடிக்கும் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அனுப்பியது குறித்த விவரங்களையும் ஆா்டிஐ மனு கோரியிருந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

தில்லி உயா் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஓா் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து மூன்று மாநில உயா் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை கடந்த மாா்ச் மாதம் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தாா். துறைரீதியான விசாரணை நடத்திய பின் இந்தக் குழு அண்மையில் அவரிடம் அறிக்கையை சமா்ப்பித்தது. அதில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி விலகுமாறு சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், பதவி விலக வா்மா மறுத்த நிலையில், அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா பரிந்துரை வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா கடந்த 14-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா்.

இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் துறைரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து அறிக்கை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் தகவல்களை வழங்கினால் உச்ச நீதிமன்றத்தின் தகவல் தொடா்பு ரகசியத்தன்மை மற்றும் நாடாளுமன்ற உரிமைகளை மீறுவதாக ஆகிவிடும் என்பதைக் குறிப்பிட்டு ஆா்டிஐ மனுவை உச்ச நீதிமன்ற நிா்வாகம் தள்ளுபடி செய்தது.

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க