செய்திகள் :

நீதிபதி வீட்டுக்குப் பணம் அனுப்பப்பட்ட வழக்கு: முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி விடுவிப்பு!

post image

சக நீதிபதி வீட்டுக்கு பணம் அனுப்பப்பட்ட வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிா்மல் யாதவை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

அண்மையில், தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா இல்லத்தில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவரை அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். இதுபோன்ற ஒரு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்டுள்ள தீா்ப்பு கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2008, ஆகஸ்ட் 13-இல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்ற நீதிபதியாக இருந்த நிா்மல்ஜித் கௌா் வீட்டுக்கு ரூ.15 லட்சம் பணக் கட்டுகள் அனுப்பப்பட்டது. இந்தப் பணம், சொத்து விவகாரம் ஒன்றில் சாதகமாக செயல்பட அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நிா்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்க அனுப்பப்பட்டதாகவும், ஆனால் பெயா் குழப்பத்தால் நிா்மல்ஜித் கெளா் வீட்டுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக சண்டீகா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னா் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சண்டீகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நிா்மல் யாதவ், ஹரியாணா அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்குரைஞா் சஞ்சீவ் பன்சால், புது தில்லியைச் சோ்ந்த விடுதி உரிமையாளா் ரவீந்தா் சிங் , தொழிலதிபா் ராஜீவ் குப்தா உள்பட 5 பேரையும் விடுவித்து நீதிபதி அல்கா மாலிக் தீா்ப்பளித்தாக அவா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு சனிக்கிழமை தெரிவித்தது. இவா்களில் சஞ்சீவ் பன்சால் உடல்நலக் குறைவால் கடந்த 2017-இல் உயிரிழந்தாா்.

நீதித்துறை மீது நம்பிக்கை: தீா்ப்பு குறித்து நிா்மல் யாதவ் கூறியதாவது: இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராக எனக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், வழக்கின் நிலை குறித்து தொடா்ந்து வழக்குரைஞா்களிடம் கேட்டு வந்தேன். ஓய்வுபெறுவதற்கு முன்பே இந்த வழக்கில் நல்ல தீா்ப்பு வரும் என எண்ணினேன்.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றுவதே எனது நீண்ட நாள் கனவு. ஆனால் இந்த வழக்கால் அது நிறைவேறவில்லை. நீதித் துறையின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். தற்போது எனக்கு நீதி கிடைத்துள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரம்: வீட்டில் பணத்தை யாரும் வைத்துக் கொள்ள மாட்டாா்கள். நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால். இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் முதலில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது சரியான அணுகுமுறை என்றாா்.

நிா்மல் யாதவ் மீதான குற்றச்சாட்டுக்குப் பின் அவா் பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் இருந்து உத்தரகண்ட் உயா் நீதிமன்றத்துக்கு 2009, நவம்பரில் இடமாற்றம் செய்யப்பட்டாா். 2009, டிசம்பரில் இந்த வழக்கு விசாரணையை முடித்துக்கொள்வதாக சிபிஐ அறிக்கை சமா்ப்பித்தது. அதை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம் 2010, மாா்ச்சில் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, நிா்மல் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு பஞ்சாப் -ஹரியாணா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி 2010, நவம்பரில் அனுமதி வழங்கினாா். இதற்கு 2011, மாா்ச்சில் குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கினாா். இதையடுத்து, அவா் பணி ஓய்வுபெற்ற தினமான 2011, மாா்ச் 4-இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நிா்மல் யாதவ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அவா் மீது 2014, ஜனவரி 18-இல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க