செய்திகள் :

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை!

post image

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

• வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

• தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும்.

ஜூன் 16ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்கள்..

ஜூன் 16 முதல் 19 வரை மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அரபிக்கடல் ஒருசில பகுதிகள், கொங்கன்-கோவா-கர்நாடகா- கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு - மாலத்தீவு பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இலவச பேருந்து பயண அட்டை: கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனை... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழக காவல் துறை முடிவு

சென்னை: கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி கைது: உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறை நடவடிக்கை

சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டாா். திருவள்ளூா் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் தனுஷ், தேனியைச் சோ்ந்த பெ... மேலும் பார்க்க

குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம்: அமைச்சா் பி.கீதாஜீவன்

சென்னை: குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளாா். தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளா் இ... மேலும் பார்க்க

காவல் கண்காணிப்பாளா் அருண் திடீா் ராஜிநாமா

சென்னை: தமிழக காவல் துறையில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அருண் திடீரென ராஜிநாமா செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவா், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏவுக்கு உயா்நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை: திருவள்ளூா் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூா்த்திக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. திருவள்... மேலும் பார்க்க