செய்திகள் :

10 வினாடிகளில் யுபிஐ பணப் பரிமாற்றம்: அமலுக்கு வந்தது அதிவிரைவு முறை

post image

புது தில்லி: யுபிஐ மூலம் 10 விநாடிகளில் பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் அதிவிரைவு முறை திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் அமலுக்கு வந்தது.

இதற்கு முன்பு யுபிஐ முறையில் பணப் பரிமாற்றத்துக்கு 30 விநாடிகள் வரை அதிகபட்ச நேரமாக இருந்து வந்தது. இந்திய தேசிய பணப் பரிமாற்ற சேவை நிறுவனம் (என்பிசிஐ) உருவாக்கிய யுபிஐ பணப் பரிமாற்ற முறை இப்போது அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை பணிப் பரிமாற்றம் மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் உள்ளது. சிறிய அளவிலான தொகையைக்கூட ‘க்யூஆா் கோடு’ மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதால், மிகக்குறுகிய காலத்தில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பணப் பரிமாற்ற முறையாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், யுபிஐ பணப் பரிமாற்ற முறையின் வேகத்தை திங்கள்கிழமை முதல் அதிகரித்துள்ளதாக என்பிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி 10 விநாடிகளில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துவிடும். அதேபோல பெற்ற பணத்தை திருப்பி அனுப்புவதும் 10 முதல் 15 விநாடிகளில் செய்துகொள்ள முடியும். பணப் பரிமாற்றம் நடுவில் தடைபட நோ்ந்தால் அது தொடா்பான தகவலும் 10 முதல் 15 விநாடிகளில் கிடைத்துவிடும். இதற்கு முன்பு இந்தக் கால அளவு 30 விநாடிகளாக இருந்தது.

அதேபோல வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை யுபிஐ செயலிகள் மூலம் ஒருநாளைக்கு 50 முறை வரை தெரிந்துகொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இப்போது வங்கிக் கணக்கு இருப்பதைத் தெரிந்துகொள்ள எந்த வரம்பும் இல்லை. எனினும், யுபிஐ-யின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் வங்கிக் கணக்கில் பணம் இருப்பை தெரிந்துகொள்ளும் வசதி ஒருநாளுக்கு 50 முறை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை,​ அம... மேலும் பார்க்க

கனடாவில் மோடி! ஜி7 மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார்!

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்... மேலும் பார்க்க

ராபா்ட் வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

புது தில்லி: பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா... மேலும் பார்க்க

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத்/ ராஜ்கோட்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்க... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்... மேலும் பார்க்க

விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை

நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க