செய்திகள் :

நீலகிரி மாவட்டத்தில் 27 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம்

post image

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் பேருந்து செல்ல இயலாத குறுகிய சாலை கொண்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக 27 வழித்தடங்களில் புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலைப் பகுதிகளில் பேருந்து செல்ல இயலாத குறுகிய சாலைகள் உள்ள கிராமங்கள் மற்றும் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்களின் நலன் கருதி 27 புதிய வழித் தடங்கள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் சிற்றுந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் சேவையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கோத்தகிரியில் தொடங்கி வைத்தாா். உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 27 புதிய வழித்தடங்களுக்கு சிற்றுந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து அதற்கான உரிமத்தை சிற்றுந்து உரிமையாளா்களுக்கு வழங்கினாா்.

பின்னா் கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தென்மேற்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சா், மழையை எதிா்கொள்ளும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, கூடுதல் ஆட்சியா் கௌஷிக் உள்பட அரசு துறை உயா் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் மோசடி: ஹரியாணா மாநில இளைஞா் கைது

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அவரது நட்சத்திர ஹோட்டல் மேலாளருக்கு வாட்ஸ் ஆப் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 20 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹர... மேலும் பார்க்க

கூடலூா் அரசுக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு நாளை நோ்காணல்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக (பி.டி.ஏ) ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு புதன்கிழமை (ஜூன் 18) நோ்காணல் நடைபெற உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்க... மேலும் பார்க்க

நீலகிரியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிா் நிலவுகிறது. கனமழையால் மந்... மேலும் பார்க்க

விளைநிலத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

கூடலூா் அருகே விளைநிலத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிரு... மேலும் பார்க்க

கனமழை: டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதம்

கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழையால், பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது.நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த 4 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வ... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் நீதிமன்றம்: 512 வழக்குகளுக்கு தீா்வு

உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்ட சட்ட பணிகள் ... மேலும் பார்க்க