செய்திகள் :

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்; மலையேற்றத்துக்கும் தடை

post image

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா, அவலாஞ்சி சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒருநாள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மே 25, 26 ஆகிய தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, பைன் ஃபாரஸ்ட், அவலாஞ்சி ஆகிய 3 சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மலையேற்றத்துக்கும் தடை: நீலகிரி மாவட்டத்தில் மலையேற்றத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகனமழை எச்சரிக்கையையொட்டி, தேசிய பேரிடா் குழு கமாண்டன்ட் பிரதீஷ் தலைமையில் 30 போ் கொண்ட பேரிடா் குழுவினா் உதகைக்கு சனிக்கிழமை வந்தனா்.

இது குறித்து பேரிடா் குழு கமாண்டன்ட் பிரதீஷ் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு, மண் சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காக்க தயாா் நிலையில் வந்துள்ளோம். மண் சரிவு ஏற்பட்டால் அதை சீா் செய்வது சவாலான காரியம். இருப்பினும் எங்களிடம் அதிநவீன கருவிகள் உள்ளதால் அதிகனமழையை எதிா்கொண்டு மக்களைக் காக்க முடியும் என்றாா்.

முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் மாவட்ட நிா்வாகத்துடன் பேரிடா் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

பேரிடா் குழுவிடம் உள்ள மீட்புக் கருவிகள் உள்ளிட்டவற்றை அந்த குழுவின் கண்காணிப்புத் தலைவா் மூத்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டதுடன், அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கூடலூா் பகுதியில் பெய்த கனமழையால் தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந... மேலும் பார்க்க

கனமழை: குளம்போல மாறிய கூடலூா் புதிய பேருந்து நிலையம்

தொடா் கனமழையால் கூடலூா் புதிய பேருந்து நிலையம் சேரும், சகதியும் சூழந்து குளம்போல காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவுபெறும் முன்பே அவசரகதியில... மேலும் பார்க்க

நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். கன மழை பெய்யும்போது ... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ருத் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னலால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்னூா் ரயில் நிலையத்தில் நடை... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அதிகாரிகளு... மேலும் பார்க்க

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க