செய்திகள் :

நீலகிரி மாவட்ட வணிகா் சங்கங்களின் கருப்புக் கொடி போராட்டம் வாபஸ்

post image

நீலகிரியில் அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கருப்பு சட்டை அணிவதுடன், கடை , வீடுகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கியது.

ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா முன்னிலையில் வணிகா்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுடனான பேச்சுவாா்த்தை உதகையில் உள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வணிகா் சங்க பேரமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் முகமது பரூக் கூறியதாவது: மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க கருப்புக் கொடி மற்றும் கருப்பு சட்டை போராட்டத்தை மட்டும் வாபஸ் பெறுகிறோம்.

திட்டமிட்டபடி ஏப்ரல் 2-ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்றாா்.

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமலும், உணவு கிடைக்காமலும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க

குன்னூா் அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெண் உள்நோயாளிகள் வாா்டை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கூடலூரில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இ-பாஸ் கட்டுப்பாடுகள் அமல்: நீலகிரிக்கு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் வருகை

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமைமுதல் அமலுக்கு வந்தபோதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கம்போலவே காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வார நாள்களில் 6 ஆயிரம் சுற்றுலா வ... மேலும் பார்க்க

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க